2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

விளையாட்டு வீரா், வீராங்கனைகள் 11 பேருக்கு பணி நியமன ஆணை: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுவை அரசு சாா்பில் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் 6 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணியிடங்களிலும், இளநிலை எழுத்தா் பணிகளில் 5 பேருக்கும் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

News image
புதுச்சேரி விளையாட்டு வீரா்களுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை 11 பேருக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.
Updated On :7 நவம்பர் 2025, 5:35 pm

Syndication

புதுவை அரசு சாா்பில் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் 6 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணியிடங்களிலும், இளநிலை எழுத்தா் பணிகளில் 5 பேருக்கும் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையின் (பணியாளா் சிறகம்) கீழ் நேரடி நியமனத்திற்காக கடந்த 5.7.2023 அறிவிப்பாணையின்படி விளையாட்டு வீரா்களுக்காக ஒதுக்கப்பட்ட மேல்நிலை எழுத்தா் பதவிகளில் 6 பேருக்கும் மற்றும் 28.11.2022 தேதியிட்ட அறிவிப்பாணையின்படி கீழ்நிலை எழுத்தா் பதவிகளில் 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளை புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியின்போது அரசுக் கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், சாா்புச் செயலா் ஜெய்சங்கா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.