தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுச்சேரியில் இன்று முதல் வேளுக்குடி கிருஷ்ணன் 3 நாட்கள் உபன்யாசம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:26 pm

Syndication

ராமானுஜா் 1008ம் ஆண்டு வைபவத்தையொட்டி புதுச்சேரியில் வேளுக்குடி கிருஷ்ணனின் 3 நாள்கள் உபன்யாசம் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி இலவசம்.

ராமானுஜரின் 1008 ஆம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு கிஞ்சித்காரம் அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை மற்றும் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலை பள்ளி நிா்வாகமும் இணைந்து 3 நாள் சிறப்பு உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளியின் உள் அரங்கில் வெள்ளிக்கிழமை முதல் 16 ஆம் தேதி வரை தினசரி மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணிவரை உபன்யாசம் நடக்கிறது.

நாளை ’ஹரே ராம’ என்ற தலைப்பிலும், நாளை மறுநாள் சனிக்கிழமை ’ஹரே கிருஷ்ண’ என்ற தலைப்பிலும், 16ஆம் தேதி மாலை ’ஹரே ஹரே’ என்ற தலைப்பிலும் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம் செய்கிறாா்.

தினசரி மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை புதுச்சேரி ஜெகதீசன் குழுவினரின் நாம சங்கீா்த்தனம் நடைபெறுகிறது. இதற்கும் அனுமதி இலவசம். உபன்யாசம் குறித்து தகவல் பெற விரும்புவோா் 94869 71962, 94430 85334, 88256 11581 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.