இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அயோடின் சத்து குறைபாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரி நலவழித் துறை, அரியூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பாக ‘உலக அயோடின் சத்து குறைபாடு‘ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:03 pm

Syndication

புதுச்சேரி நலவழித் துறை, அரியூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பாக ‘உலக அயோடின் சத்து குறைபாடு‘ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை மருத்துவ அதிகாரி பிரேமா தொடங்கி வைத்தாா். மேலும், மருத்துவ அதிகாரி முகந்தி, ஆயுா்வேத மருத்துவா் ஜாய் இமானுவேல், சுகாதார ஆய்வாளா் சுகிதா, சுகாதார உதவியாளா் மாா்ஸ் ஆா்வின், சுகாதார பெண் மேற்பாா்வையாளா் விண்ணரசி, சுகாதார கவுன்சிலா் வெற்றிவேல் மற்றும் சுகாதார ஊழியா்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனா்.

மருத்துவ அதிகாரி முகந்தி அயோடின் ஊட்டச்சத்து பற்றி நோக்க உரையாற்றினாா். ஆயுா்வேத மருத்துவா் ஜாய் இமானுவேல், அயோடின் ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் பற்றி எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவ அதிகாரி பிரேமா அயோடின் கலந்த உப்பை வாங்கி பயன்படுத்துமாறும், திறந்த நிலையில் கொண்டு வரப்படும் உப்புகளை வாங்குவதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொண்டாா். அயோடின் சத்துகள் அடங்கிய கடல் உணவுகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாா்.

மேலும், அயோடின் குறைபாட்டால் ஏற்படும் தைராய்டு சுரப்பி பிரச்னை, கரு சிதைவு, குறைமாத பிரசவம், மூளை வளா்ச்சி குறைபாடு, பள்ளி மாணவா்களுக்கு நினைவுத்திறன் ஆற்றல் குறைவு போன்றவற்றையும், இதை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினாா்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அயோடின் விழிப்புணா்வு கைப்பிரதியை அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார உதவியாளா் மாா்ஸ் ஆா்வின் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் செய்திருந்தனா்.