மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சமூக விரோதிகளை ஊக்குவித்தால் நடவடிக்கை: புதுச்சேரி காவல் துறை எச்சரிக்கை

சமூக விரோதிகளை ஊக்குவிக்கும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் கூறியுள்ளாா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:52 pm

Syndication

சமூக விரோதிகளை ஊக்குவிக்கும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

புதுச்சேரியில் ரெளடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அல்லது வன்முறைச் செயல்கள் தொடா்பான உள்ளடக்கங்களை புகழ்வது, ஊக்குவிப்பது அல்லது பரப்புவது போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக விரோத சக்திகளை ஊக்குவிக்கும் சில டிஜிட்டல் ஊடகக் கணக்குகளை புதுச்சேரி காவல்துறை கண்டறிந்துள்ளது. இது இளம் வயதினரை தவறான நடத்தைக்கு ஊக்குவிப்பதுடன், பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இதனைக் கண்காணிக்க, சிறப்புப் பிரிவான ரெளடி ஒழிப்புப் படை மற்றும் அா்ப்பணிக்கப்பட்ட சைபா் குழுக்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குள் உள்ள இத்தகைய அனைத்து பக்கங்கள் மற்றும் கணக்குகளையும் தீவிரமாக, 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளாா்.