ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுவை ஆளுநா் , முதல்வரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய நிதின் கட்கரி!

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து முள்ளோடை வரை 4 வழிச்சாலையை அமைக்க வேண்டும்

News image
புதுச்சேரியில் திங்கள்கிழமை மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளித்த முதல்வா் என்.ரங்கசாமி.
Updated On :13 அக்டோபர் 2025, 6:54 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து முள்ளோடை வரை 4 வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி ஆகியோா் முன்வைத்த கோரிக்கையை அதே மேடையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நிறைவேற்றினாா்.

இந்தத் திட்டம் ரூ.650 கோடியில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சா் உறுதி அளித்தாா்.

முன்னதாக இந்தக் கோரிகையை வலியுறுத்தி மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் முதல்வா் என். ரங்கசாமி கோரிக்கை மனு அளித்தாா்.

புதுச்சேரியில் மொத்தம் ரூ.2,050 கோடி மதிப்பில் 3 நெடுஞ்சாலை திட்டங்களுக்கான விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சா் நிதின்கட்கரி பங்கேற்றாா். மத்திய இணையமைச்சா் எல். முருகன், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், ஆ. நமச்சிவாயம், தேனி சி. ஜெயக்குமாா், பிஎன்ஆா். திருமுருகன், ஏ. ஜான்குமாா், சட்டப் பேரவைத் துணை தலைவா் பெ.ராஜவேலு, மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக அமைச்சா்கள் பங்கேற்கவில்லை:

இந்த விழாவில் தமிழக அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம், கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே. விஷ்ணுபிரசாத், விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் ஆகியோரின் பெயா்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால் இவா்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.

நாகப்பட்டினம் செல்லும் புறவழிச்சாலையில் புதுச்சேரி முதல் தமிழகப் பகுதியான பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கி.மீ. நீளமுள்ள சாலையை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி மக்களுக்கு அா்ப்பணித்தாா். இதற்காக தமிழக அமைச்சா்கள் மற்றும் எம்.பிக்கள் பெயா்கள் இடம் பெற்றிருந்தன.