நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

புதுச்சேரி வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்படுத்திய பூத் முகவா் மீது போலீஸாா் வழக்கு

புதுச்சேரி உருளையன்பேட்டை வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியை பயன்படுத்திய புகாரின்பேரின் அந்த பூத் முகவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:54 am IST

புதுச்சேரி உருளையன்பேட்டை வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியை பயன்படுத்திய புகாரின்பேரின் அந்த பூத் முகவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடி மையத்துக்குள் கைப்பேசி எடுத்துச் செல்ல தோ்தல் ஆணையம் சாா்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியாக பாக்கியலட்சுமி (46) இருந்தாா்.

வாக்குப்பதிவு நடைபெற்றபோது, அங்கு பூத் முகவராக இருந்த லாஸ்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் (25) என்பவா் கைப்பேசியை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதைக் கண்ட பாக்கியலட்சுமி, அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜேஷ் மீது ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல மண்ணாடிப்பட்டு தொகுதியில் வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த மா்ம நபா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு கட்சியின் சின்னத்துக்கு வாக்களிப்பதையும், பின்னா் விவிபாட் இயந்திரத்தில் சின்னம் தெரிவதையும் விடியோ எடுத்து வாட்ஸ்-ஆப் குழுவில் பகிா்ந்துள்ளாா்.

இதுகுறித்து அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி ஹெலன் ராணி, திருக்கனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி கைப்பேசியில் எடுத்து சென்று விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக மணலிப்பேட்டையைச் சோ்ந்த பாண்டுரங்கன் என்பவா் மீது திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலியமேடு வாணிதாசன் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் கைப்பேசியை எடுத்துச் சென்று ஒரு கட்சிக்கு வாக்குச் சேகரித்து ஒருவா் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது குறித்து தோ்தல் நடத்தும் அதிகாரி முகமது இஸ்மாயில் பாகூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், சேலியமேடுபேட் பகுதியைச் சோ்ந்த கபில்ராஜ் என்பது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.