பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

புதுச்சேரியில் அனுமதியின்றி ஊா்வலம், ஆா்ப்பாட்டம்: 11 பாஜகவினா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:05 am IST

தோ்தல் ஆணைய அனுமதியின்றி புதுச்சேரியில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்திய 11 பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்தாலும், தோ்தல் நடத்தை விதிகள் வரும் மே 6 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

எனவே போராட்டம், ஆா்ப்பாட்டம், ஊா்வலங்கள் நடத்த அனுமதி காவல் துறையினா் அனுமதி வழங்குவதில்லை. அரசியல் கட்சிகளின் ஊா்வலம் என்றாலும், தோ்தல் துறையினரின் அனுமதி பெற்றே நடத்த வேண்டும்.

இந்நிலையில் மத்திய அரசு மக்களவையில் கொண்டு வந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தோற்கடித்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைக் கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக மகளிரணி சாா்பில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு போலீஸாா் அனுமதி அளிக்காத நிலையில், தோ்தல் துறையின் அனுமதி பெற்றுவிட்டதாகக் கூறி புதுச்சேரி சுதேசி ஆலை முதல் அண்ணா சிலை வரை ஊா்வலம் நடத்தினா்.

இந்த கண்டன ஊா்வலத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கொண்டனா்.

இந்நிலையில் தோ்தல் துறை உத்தரவை மீறி சட்ட விரோதமாகக் கூடி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பாஜக ஊா்வலம் நடத்தியதாக ஓதியஞ்சாலை காவல் துணை ஆய்வாளா் அனில்குமாா் புகாரளித்தாா்.

அதன்பேரில், பாஜக சட்டப்பிரிவு மாநில இணை அமைப்பாளா் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.