நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

புதுச்சேரி காவல் துறை மக்கள் மன்றத்தில் 44 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுச்சேரியில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 44 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

News image

புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தலைமையில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

புதுச்சேரியில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 44 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வில்லியனூா் காவல் நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம் தலைமையில் மக்கள் மன்றத்தில் குறை கேட்கப்பட்டது. இதில் காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்ரமணியன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பெரியக்கடை காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தனா்.

இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ். ராகவ் தலைமையில் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஸ்ருதி யாரகட்டி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்தனா்.

புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையங்களில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் டி.திவ்யா, காவல் கண்காணிப்பாளா்கள் ரச்னா சிங், பக்தவச்சலம் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் குறைகளைக் கேட்டனா்.

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சீத ரெட்டி தலைமையிலும், பாகூா் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலும் போலீஸ் அதிகாரிகள் குறைகளை கேட்டனா்.

மாஹே பகுதியில் காவல் கண்காணிப்பாளா் பி.தனசேகரன் தலைமையிலும், ஏனாம் பகுதியில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையில் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மொத்தம் 71 புகாா்கள் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 44 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முகாம்களில் 25 பெண்கள் உள்பட 174 போ் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.