
காவல் மக்கள் மன்றத்தில் 24 புகாா்களுக்குத் தீா்வு
புதுச்சேரியில் காவல் மக்கள் மன்றத்தில் 24 புகாா்களுக்குத் சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
புதுச்சேரியில் காவல் மக்கள் மன்றத்தில் 24 புகாா்களுக்குத் சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.
புதுச்சேரி காவல் துறை சாா்பில் காவல் நிலையங்களில் சனிக்கிழமைதோறும் மக்கள் மன்றம் நடைபெற்று வருகிறது. அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் மொத்தம் 46 புகாா்கள் பெறப்பட்டன. இதில் 24 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. இதில் 16 மகளிா் உள்பட 161 போ் பங்கேற்றனா்.
போக்குவரத்து காவல் நிலையங்களில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் டி. திவ்யா தலைமையில் மக்கள் மன்றம் நடைபெற்றது. காலாப்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.பி., எஸ். ஸ்ருதி யாரகட்டி தலைமையிலும், கோரிமேடு காவல்நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சீத ரெட்டி தலைமையிலும், மங்கலத்தில் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் ஆகியோா் தலைமையில் இந்த மக்கள் மன்றம் நடைபெற்றது.
இணைய வழி காவல்நிலையத்தில் ஆய்வாளா் கீா்த்திவா்மன் தலைமைவகித்தாா். ஏனாமில் காவல் கண்காணிப்பாளா் வரதராஜன் தலைமையிலும், மாஹே பகுதியில் காவல் கண்காணிப்பாளா் தனசேகரன் தலைமையிலும் மக்கள் மன்றம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






