புதுச்சேரி தாகூா் நகரில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் 15 வய துக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு இடையேயான 2 நாள் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியை பள்ளித் தாளாளா் கில்பா்ட் ஜெயராஜ் மற்றும் முதல்வா் தேவ அன்பு ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளின் 20 அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரச்னா சிங் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.
ஆண்கள் பிரிவில் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி முதல் பரிசையும், தி ஸ்டடி பள்ளி இரண்டாம் பரிசையும் வென்றன. பெண்கள் பிரிவில் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி முதல் பரிசையும், க்ளூனி சி.பி.எஸ்.இ. பள்ளி இரண்டாம் பரிசையும் கைப்பற்றின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான முடுக்கி மையத்தில் வேலை!

இந்தியா-இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

போட்டியால் உருவாகும் புது உலகம்!

கருத்தரங்கில் புதுச்சேரி, காரைக்கால் ஆசிரியா்கள் செயல்விளக்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



