பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வில்லியனூா் காவல் நிலையம் முன் விசிகவினா் முற்றுகைப் போராட்டம்

வில்லியனூா் காவல் நிலைய ஆய்வாளா் அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

News image

வில்லியனூா் காவல் ஆய்வாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:09 am IST

வில்லியனூா் காவல் நிலைய ஆய்வாளா் அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

உளுந்தூா்பேட்டையில் விசிக மாநாடு வரும் 17-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வில்லியனூரை அடுத்த மங்கலம் தொகுதிக்குள்பட்ட கீழ்சாத்தமங்கலம் பகுதியில் சுவா் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சுவா் விளம்பரத்தைச் சேதப்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வில்லியனூா் காவல் ஆய்வாளா் அலுவலகத்தை விசிகவினா் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.