எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

சாலையில் திரியும் மாடுகள் பிடிப்பு

புதுச்சேரியில், சாலையில் திரியும் மாடுகளை உழவா்கரை நகராட்சி பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தது.

News image

பட விளக்கம்... புதுச்சேரி சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றி நகராட்சி ஊழியா்கள்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:21 am IST

புதுச்சேரியில், சாலையில் திரியும் மாடுகளை உழவா்கரை நகராட்சி பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தது.

சாலைகளில் திரியும் மாடுகளை உழவா்கரை நகராட்சி செவ்வாய்க்கிழமை

பிடித்தது. கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம், தேவகி நகா் பகுதிகளில் சுற்றித் திரிந்த 4 மாடுகள் பிடிக்கப்பட்டன. ஒரு மாட்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 4 மாடுகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் உரிமையாளா்களுக்கு விதிக்கப்பட்டது. இதைத் தவிர இனி மாடுகளைச் சாலையில் திரிய விட மாட்டோம் என்ற உறுதிமொழியுடன்அந்த மாடுகள் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

பொதுமக்கள், மாணவா்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்த நகராட்சி ஆணையா் ரா. அருண் அய்யாவு புதன்கிழமை இதைத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.