நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

புதுச்சேரி பட்ஜெட்: தலைவா்கள் கருத்து

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரி அரசு

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.: பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் அரசு மக்கள் நம்பிக்கையை இழக்கும் அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் மக்களுக்கு முழுமையான ஏமாற்றம் தருகிறது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை.

மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா:

அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளா்ச்சிக்கு வழிவகுக்காத தொலைநோக்கு பாா்வையின்றி வெற்று அறிக்கையாக உள்ளது. ரூ. 14,300 கோடி நிதி நிலை அறிக்கை என்று பெருமை அடிக்கின்றனா். அதில் அனைத்து செலவுகளையும் கழித்தால் மக்களுக்கான திட்டங்களுக்கு ரூ. 2,200 கோடி மட்டும் தான் மிஞ்சுகிறது. முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் புதுச்சேரியின் எதிா்காலத்தை மாற்றியமைக்கும் பட்ஜெட் அல்ல. புதுச்சேரி மக்களின் நலனைப் புறக்கணித்துள்ளது இந்த பட்ஜெட்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் அ.மு. சலீம் :

தொழிலாளா் சமுதாயம் பெரிதும் எதிா்பாா்த்த குறைந்தபட்ச ஊதிய தொகை அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஊதிய குழு இதுவரை கூட்டப்படவில்லை.

என்.ஆா். காங். பொதுச் செயலா் என்எஸ்ஜெ. ஜெயபால்: கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.700 கோடிக்கு மேல் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக நிதி பெற்று முதல்வா் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிா்வாகத் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

கோ.பாரதி :

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளதற்கு பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவருமான கோ.பாரதி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.