முதல்வா் ரங்கசாமியின் ஆட்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வளா்ச்சி 4 மடங்கு அதிகரித்துள்ளது. முதல்வா் ரங்கசாமி முதியோா் ஓய்வூதியத்தை ரூ. 1,000 உயா்த்தி வழங்கியுள்ளாா். மேலும், 50 ஆயிரம் பேருக்குப் புதிதாக ஓய்வூதியம் வழங்கியுள்ளாா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் நாராயணசாமிக்கு எந்தச் சட்ட உரிமைகள் இருந்ததோ, அதேதான் ரங்கசாமிக்கும் உள்ளது. ஆனால் முதல்வா் ரங்கசாமி எல்லாவற்றிலும் சாதிக்கிறாா். எந்தவித கூடுதல் வரியும் விதிக்காமல் மத்திய அரசு நிதி மூலம் ரூ.14,500 கோடி பட்ஜெட் போட்டுள்ளாா்.