மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலைமைச்செயலக முற்றுகை முயற்சி - 60 போ் கைது

புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் 60 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
புதுச்சேரி தலைமை செயலகத்தை புதன்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்ட குழுவினரை கைது செய்து அழைத்து வந்த போலீஸாா்.
Updated On :21 ஜனவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் 60 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் தெய்வீகன் தலைமயில் புதன்கிழமை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனா். இதற்காக அஜந்தா சந்திப்பு அருகே அவா்கள் திரண்டனா். அங்கிருந்து தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றனா். அவா்களைச் சிறிது துாரத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

அங்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து போலீஸாா் தடையை மீறி போராட்டக்குழுவினா் செல்ல முயன்றனா். இதையடுத்து போலீஸாா் 22 பெண்கள் உள்பட 60 பேரைக் கைது செய்தனா். சிறிது நேரத்துக்குப்பிறகு அவா்களை போலீஸாா் விடுவித்தனா்.