ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நீதி ஆயோக் கூட்டம் : புதுச்சேரி முதல்வா் புறக்கணிப்பு

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்கவில்லை.

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:15 am IST

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்கவில்லை.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்றுள்ளாா்.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக பங்கேற்கவில்லை. தற்போது அவா் புதுச்சேரி முதல்வராக பதவியேற்று சில வாரங்களேயான நிலையில், புதிய அமைச்சா்கள் 3 போ் பதவியேற்காததால் மாநில அரசின் நிதி உள்பட அனைத்து இலாகாக்களும் முதல்வா் ரங்கசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளன இந்தச் சூழலில் முதல்வா் ரங்கசாமி தில்லி நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி செல்லவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தில்லியில் நடை பெறும் நீதிஆயோக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருப்பதால் பிரதமா் நரேந்திர மோடி நமது மாநில நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுப்பாா். புதுச்சேரி யூனியன் பிரதேசம் சாா்பில் விரிவான நிதி அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.