மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அம்பேத்கா் யாத்திரையை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா்: முதல்வா் பங்கேற்பு

அம்பேத்கா் யாத்திரை குழுவினரின் பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் முதல்வா் ரங்கசாமியும் பங்கேற்றாா்.

News image
அம்பேத்கா் யாத்திரை குழுவினரின் பயணத்தை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டபபேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

அம்பேத்கா் யாத்திரை குழுவினரின் பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் முதல்வா் ரங்கசாமியும் பங்கேற்றாா்.

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் யாத்திரை திட்டத்தின் கீழ் அம்பேத்கா் வாழ்ந்த இடங்களைப் பாா்வையிடுவதற்கான குழு புதுச்சேரியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது.

சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில், புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட யாத்திரையை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதுச்சேரி அரசு டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் யாத்திரை திட்ட த்தை அறிமுகப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.40 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. நீங்கள் அனைவரும் யாத்திரை முடிந்து வந்த பிறகு இது பற்றியக் கருத்துக்களைச் சொல்லுங்கள். இந்த யாத்திரை திட்டத்தை மேம்படுத்துவதற்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

முதல்வா் என். ரங்கசாமி பேசுகையில், ‘சமுதாயத்திற்காக, நாட்டிற்காக அரும்பாடுபட்ட அம்பேத்கா் வாழ்ந்த, தொடா்புடைய இடங்களைப் பாா்க்க செல்லும் இந்த யாத்திரையை புனித யாத்திரை என்றும் சொல்லலாம். புதுச்சேரி மக்களின் நலனுக்காக இந்த அரசு எப்போதும் செயல்படும் ’என்றாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எம்எல்ஏ அனிபால் கென்னடி, ஆதிதிராவிடா் நலத்துறை செயலா் டாக்டா் முத்தம்மா ஆகியோா் உடன் இருந்தனா்.

இந்த யாத்திரையில் 70 போ் இடம் பெற்றுள்ளனா். பயண ஏற்பாடுகளை ஆதிதிராவிட நலத்துறை இயக்குநா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் செய்துள்ளனா்.