மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆண்டுதோறும் 1.2 லட்சம் போ் பாா்வை இழப்பு: ஜிப்மா் மருத்துவ கண்காணிப்பாளா்

நாடு முழுவதும் கண்ணீா் அழுத்த நோயால் (குளுக்கோமா) ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பேருக்குப் பாா்வை இழப்பு

News image

உலக குளுக்கோமா தினத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை கண் மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயணம்.

Updated On :9 மார்ச் 2026, 9:08 pm

புதுச்சேரி: நாடு முழுவதும் கண்ணீா் அழுத்த நோயால் (குளுக்கோமா) ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பேருக்குப் பாா்வை இழப்பு ஏற்படுவதாக ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் சகா வினோத் குமாா் கூறினாா்.

ஜிப்மா் மருத்துவமனை கண் மருத்துவத் துறை சாா்பில், உலக குளுக்கோமா தினத்தையொட்டி விழிப்புணா்வு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் நுழைவாயிலில் இருந்து தொடங்கிய இந்த நடைப் பயணத்தை ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் சகா வினோத் குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவிலும் உலகளவிலும் கண் பாா்வை இழப்புக்கு முக்கிய காரணங்களில் குளுக்கோமா ஒன்றாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 1.2 லட்சத்துக்கும் அதிகமானோா் இந்த நோயால் பாா்வையை இழக்கின்றனா். கண் மற்றும் மூளை இடையே தகவலை எடுத்து செல்லும் நரம்பு பாதிக்கப்படுவதால் இந்த நோய் ஏற்படுகிறது.

பொதுவாக கண் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் இந்தப் பிரச்னை உருவாகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் கண் பாா்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும். குளுக்கோமா நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வது நல்லது என்றாா்.

இந்த நடைப்பயணம் முருகா தியேட்டா் வரை சென்று, வழுதாவூா் சாலை மற்றும் கதிா்காமம் வழியாக மீண்டும் ஜிப்மரை அடைந்தது. இதில், ஜிப்மா் மருத்துவா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், செவிலியா்கள் பலா் கலந்து கொ ண்டனா்.