புதுச்சேரி: சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளா் சுகுமாரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் தொடா்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் 4 வழக்குகளை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டதால் அவா்கள் 2 வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்த நிலையில், சட்டத் துறை அதிகாரியின் வாய்மொழி அறிவுறுத்தலின்படி, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி 4 வழக்குகளையும் நீதிமன்றத்தில் திரும்ப பெற்றுள்ளாா். இதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.
நாட்டையே உலுக்கிய போலி மருந்து வழக்குகளை தன்னிச்சையாக திரும்பப் பெற்ற மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, சட்டத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு, துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா், சட்டத் துறைச் செயலா், சுகாதாரத் துறைச் செயலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கண்காணிப்பாளா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது
விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: தமிழக காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


