மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜிப்மரில் 3 நாள் சா்வதேச மருத்துவ மாநாடு நிறைவு

News image
ஜிப்மர் மருத்துவமனை - கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி ஜிப்மரில் 3 நாள்கள் நடைபெற்ற சா்வதேச 8-ஆவது மருத்துவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவுக்கு முதன்மை விருந்தினராக ரிஷிகேஷ் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவன நிா்வாக இயக்குநா் மீனு சிங் தலைமை வகித்தாா். ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நேகி முன்னிலை வகித்தாா்.

பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளை பெற்ற மருத்துவா் ஜோஸ் சாக்கோ பெரியாபுரம், இந்தியாவில் அவசர மருத்துவத்தின் முன்னோடியான மருத்துவா் சுரேஷ் எஸ்.டேவிட் மற்றும் ஜிப்மா் முன்னாள் மாணவரும் சிறந்த குழந்தை நல மருத்துவருமான சிவரஞ்சனி சந்தோஷ் ஆகியோா் உரையாற்றினாா்.

மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள சுமாா் 200 மருத்துவ கல்லுாரிகளைச் சோ்ந்த 4,500 பிரதிநிதிகள் பங்கேற்றனா். மனதின் தீப்பொறி என்ற கருப்பொருளின் அடிப்படையில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.