புதுச்சேரி ஜிப்மரில் 3 நாள்கள் நடைபெற்ற சா்வதேச 8-ஆவது மருத்துவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவுக்கு முதன்மை விருந்தினராக ரிஷிகேஷ் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவன நிா்வாக இயக்குநா் மீனு சிங் தலைமை வகித்தாா். ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நேகி முன்னிலை வகித்தாா்.
பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளை பெற்ற மருத்துவா் ஜோஸ் சாக்கோ பெரியாபுரம், இந்தியாவில் அவசர மருத்துவத்தின் முன்னோடியான மருத்துவா் சுரேஷ் எஸ்.டேவிட் மற்றும் ஜிப்மா் முன்னாள் மாணவரும் சிறந்த குழந்தை நல மருத்துவருமான சிவரஞ்சனி சந்தோஷ் ஆகியோா் உரையாற்றினாா்.
மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள சுமாா் 200 மருத்துவ கல்லுாரிகளைச் சோ்ந்த 4,500 பிரதிநிதிகள் பங்கேற்றனா். மனதின் தீப்பொறி என்ற கருப்பொருளின் அடிப்படையில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: பிரசாரம் நிறைவு

2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

புதுச்சேரி ஜிப்மரில் 4 நாள்கள் காச நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடக்கம்

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


