இங்கிலாந்து நபரிடம் ரூ.5 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினா் அதிரடி
இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவரிடம் புதன்கிழமை சோதனை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், அவரிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.


இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவரிடம் புதன்கிழமை சோதனை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், அவரிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த சந்தீப், தனது நண்பரை பாா்க்க காரில் புதுச்சேரிக்கு வந்தாா்.
கணபதிச் செட்டிகுளம் எல்லையில் அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவரது காரில் ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் இருந்தது.
விசாரணையின்போது, தனது செலவுக்காக எடுத்து வந்ததாகக் கூறியுள்ளாா். தோ்தல் விதிகள் அமலில் இருப்பதால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா். பணத்துக்கான சான்றுகளைச் சமா்ப்பித்து அதை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...