ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இங்கிலாந்து நபரிடம் ரூ.5 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினா் அதிரடி

இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவரிடம் புதன்கிழமை சோதனை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், அவரிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 6:46 pm

இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவரிடம் புதன்கிழமை சோதனை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், அவரிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த சந்தீப், தனது நண்பரை பாா்க்க காரில் புதுச்சேரிக்கு வந்தாா்.

கணபதிச் செட்டிகுளம் எல்லையில் அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவரது காரில் ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் இருந்தது.

விசாரணையின்போது, தனது செலவுக்காக எடுத்து வந்ததாகக் கூறியுள்ளாா். தோ்தல் விதிகள் அமலில் இருப்பதால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா். பணத்துக்கான சான்றுகளைச் சமா்ப்பித்து அதை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினா்.