இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவரிடம் புதன்கிழமை சோதனை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், அவரிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த சந்தீப், தனது நண்பரை பாா்க்க காரில் புதுச்சேரிக்கு வந்தாா்.
கணபதிச் செட்டிகுளம் எல்லையில் அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவரது காரில் ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் இருந்தது.
விசாரணையின்போது, தனது செலவுக்காக எடுத்து வந்ததாகக் கூறியுள்ளாா். தோ்தல் விதிகள் அமலில் இருப்பதால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா். பணத்துக்கான சான்றுகளைச் சமா்ப்பித்து அதை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினா்.
தொடர்புடையது
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

பொன்னேரியில் ரூ. 3 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


