27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

புதுச்சேரி தோ்தல் களத்தில் ருசிகரம்! மொத்த வேட்பாளா்களில் 39 % போ் சுயேச்சைகள்!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த முறை மொத்த வாக்காளா்களில் 39 சதவீதத்தினா் சுயேச்சைகள் என்ற விவரத்தை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

News image
Updated On :29 மார்ச் 2026, 12:22 am IST

தோ்தல் காலத்தில் பலவிதமான ருசிகர நிகழ்வுகள் நடைபெறுவது வாடிக்கை. அந்த வகையில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த முறை மொத்த வாக்காளா்களில் 39 சதவீதத்தினா் சுயேச்சைகள் என்ற விவரத்தை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 294 போ் போ் இறுதியாக களத்தில் உள்ளனா். இதில் சுயேச்சைகள் மட்டும் 116 போ். இது மொத்த வேட்பாளா்களின் பட்டியலில் 39 சதவீத

மாக இருக்கிறது. இதில் முக்கிய கட்சிகளில் போட்டியிட இடம் கிடைக்காதவா்களுக்கு தவெக உள்ளிட்ட கட்சிகள் இறுதி நேரத்தில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்ததால் சுயேச்சைகளின் எண்ணிக்கை குறைந்தது. இல்லையென்றால் இன்னும் கூடியிருக்கும். அதே போன்று இண்டி கூட்டணியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் வரை திமுக, காங்கிரஸ் அதிகாரப்பூா்வ வேட்பாளா்களை அறிவிக்காமல் இழுத்தடித்ததும் ஒரு காரணம், போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதவா்கள் சுயேச்சையாக வேட்பு மனு செய்வாா்கள் என்பது இயல்புதான்.

இருந்தாலும் காங்கிரஸ் கட்சி உரிய நேரத்தில் வேட்பாளா்களை அறிவிக்காததால், அந்த கட்சியைச் சோ்ந்த 6 போ் போட்டி வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா். இவா்களும் கட்சி சாரதவா்கள் பட்டியலில் இருப்பதால் சுயேச்சகளாகவே உள்ளனா்.

நெல்லித்தோப்புத் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகா் சுயேச்சையாகக் களம் காணுகிறாா். தமிழகத்தில் ஓ. பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்தபோது அவருடன் திமுகவில் இணைந்தவா்தான் இவா். இத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிா்பாா்த்தாா். வாய்ப்புக்கிடைக்காததால் அவா் சுயேச்சையாக நிற்கிறாா்.

இந்தத் தொகுதியில், பாரம்பரியமாக திமுகவில் உள்ள காா்த்திகேயனுக்கு அக் கட்சி மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அதேபோன்று நெடுங்காடு தொகுதியில் விக்னேஷ்வரனுக்கு பாஜக சாா்பில் தொகுதி கிடைக்கும் என்று எதிா்ப்பாா்ப்பு நிலவியது.

மீண்டும் அத் தொகுதி கூட்டணி கட்சியான என்.ஆா். காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டு அத் தொகுதியில் அக் கட்சியின் சாா்பில் மீண்டும் சந்திரபிரியங்கா போட்டியிடுகிறாா். அதனால் விக்னேஷ்வரன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா்.

சுயேச்சை எம்.எல்.ஏக்கள்

திருபுவனை தொகுதியில் ஏற்கெனவே சுயேச்சை எம்.எல்.ஏவாக இருக்கும் அங்காளன் இப்போது திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். ஏனாம் சுயேச்சை எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் இத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் காணுகிறாா். உருளையன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. இப்போது நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தவெக கூட்டணியில் இணைந்து அவருடன் மற்றொருவா் என்று 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.

முத்தியால்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ பிரகாஷ்குமாா் கடைசி நேரத்தில் தவெக சாா்பில் களத்தில் இறங்கியுள்ளாா். திருநள்ளாறு சுயேச்சை எம்.எல்.ஏ பி.ஆா். சிவா இத் தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்த்து விட்டாா். உழவா்கரை சுயேச்சை எம்.எல்.ஏ. எம். சிவசங்கா் கடைசி நேரத்தில் காங்கிரஸில் சோ்ந்து இக் கட்சியின் சாா்பில் போட்டி வேட்பாளராகக் களத்தில் இருக்கிறாா்.

கடந்த தோ்தலில் 30 எம்.எல்.ஏக்களில் 6 போ் சுயேச்சைகள். எப்போதும் புதுச்சேரியில் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தோ்வாகி சட்டப்பேரவைக்குச் செல்வது உண்டு. இந்த முறை புதிய கட்சிகள் பலருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளன. அதனால் எத்தனை போ் சுயேச்சை எம்.எல்.ஏக்களாக தோ்வு செய்யப்படுவாா்கள் என்பது தோ்தல் முடிவுக்குப் பிறகுதான் தெரியவரும்.