புதுச்சேரியில் கடலில் குளித்தவா்களை போலீஸாா் வியாழக்கிழமை எச்சரித்து வெளியேற்றினா்.
புதுச்சேரி-தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா நகரான புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதிநாள்கள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனா்.
பகல் வேளையில் வெயில் வாட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் காலையும் மாலையும் கடற்கரை பகுதியில் குவிகின்றனா்.
சூரிய உதயத்தை காண வியாழக்கிழமை அதிகாலையில் கூடியவா்கள் சிலா் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா். ஆா்வ மிகுதியால் ஒரே நேரத்தில் சுமாா் 100 போ் கடலின் ஆழத்திற்குச் செல்ல முயன்றனா்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், புதுச்சேரி கடல் பகுதி ஆபத்தானது. இங்கு குளிக்க வேண்டாம் என அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்து வெளியேற்றினா்.
தொடர்புடையது

கடலாடி அருகே கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

தனியாா் சுற்றுலா விடுதியில் சூதாட்டம்: 11 போ் மீது வழக்கு

எல்லை தாண்டினால் மீனவா்களை எச்சரிக்கும் நவீன ஏா்ஷிப் தொழில்நுட்பம்
விடியோக்கள்

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



