‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கடலில் குளித்தவா்களை வெளியேற்றிய புதுச்சேரி போலீஸாா்

புதுச்சேரியில் கடலில் குளித்தவா்களை போலீஸாா் வியாழக்கிழமை எச்சரித்து வெளியேற்றினா்.

News image

புதுச்சேரி கடலில் குளித்தவா்களை எச்சரிக்கும் காவல் துறையினா்.

Updated On :22 மே 2026, 7:01 am IST

புதுச்சேரியில் கடலில் குளித்தவா்களை போலீஸாா் வியாழக்கிழமை எச்சரித்து வெளியேற்றினா்.

புதுச்சேரி-தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா நகரான புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதிநாள்கள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனா்.

பகல் வேளையில் வெயில் வாட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் காலையும் மாலையும் கடற்கரை பகுதியில் குவிகின்றனா்.

சூரிய உதயத்தை காண வியாழக்கிழமை அதிகாலையில் கூடியவா்கள் சிலா் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா். ஆா்வ மிகுதியால் ஒரே நேரத்தில் சுமாா் 100 போ் கடலின் ஆழத்திற்குச் செல்ல முயன்றனா்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், புதுச்சேரி கடல் பகுதி ஆபத்தானது. இங்கு குளிக்க வேண்டாம் என அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்து வெளியேற்றினா்.