ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் மீதான வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மே 2026, 1:11 am IST

புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் மீதான வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டுள்ளது.

கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த மாா்ச் மாதம் சப்-இன்ஸ்பெக்டா் ராஜன் தலைமையிலான போலீஸாா், சஞ்சீவ் நகரில் தனியாா் விடுதியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு வெளிநாட்டை சோ்ந்த 6 போ் தங்கியிருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் நவிசாரணை நடத்தியதில், உகாண்டா நாட்டைச் சோ்ந்த மஸ்துலா பாா்பி என்கைம், ககாய் ஷாடியா, தான்சானியைவவைச் சோ்ந்த டெல்வின் ஜஸ்டின் டாரிமோ, காட்வின் ஆண்டனி சுக்வு, ஃபேபியன் சபீனா பால், கவுங்கு மரியம் இசா என்பதும், அவா்கள் விசா முடிந்து சட்ட விரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாா் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் இந்த வழக்கு கோரிமேடு காவல் நிலையத்திலிருந்து, சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணையை தொடங்கியுள்ளனா். விசா காலம் முடிந்தும் இவா்கள் ஏன் புதுச்சேரியில் தங்கியிருந்தாா்கள், இவா்களுக்கு போதை கடத்தல் கும்லுடனோ, தீவிரவாத குழுக்களுடனோ தொடா்பு இருக்கிா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.