கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேர் பைபாஸ் சாலையில் அதிக அளவில் டிராக்டர்கள் நிறுத்தப்படுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த டிராக்டர்கள் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையில் போதிய இடமில்லாத நிலை ஏற்படுகிறது.
ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்திச் செல்லும் போதும், எதிர் எதிரே வரும் போதும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.