

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக, இன்று மாலை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம்- காட்பாடி ரயில் பாதையில் மாம்பழப்பட்டு-திருக்கோவிலூர் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதனால், விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், ஒரு மணி நேரம் காலதாமதமாக விழுப்புரத்திலிருந்து அன்று மாலை 5.35 மணிக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.