மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் சாவு 

கள்ளக்குறிச்சி அருகே மொபெட் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:30 am IST

கள்ளக்குறிச்சி அருகே மொபெட் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
 கடலூர் மாவட்டம், வேப்பூர் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்தராஜா (18). இவர், தனது நண்பரான புதூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பிரகாஷுடன் நைனார்பாளையம் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். மொபெட்டை பிரகாஷ் ஓட்டிச் சென்றார்.
 செம்பாக்குறிச்சி மான்குட்டை அருகே சென்ற போது மொபெட் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். அவர்களில் ஆனந்தராஜா வேப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரகாஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.