மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பால் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, கைலாசநாதர் கோயிலுக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:08 am

DIN

விழுப்புரம் வீரவாழியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, கைலாசநாதர் கோயிலுக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோயிலில் 54-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகத்துடன் தொடங்கியது.
சித்ரா பௌர்ணமியான ஞாயிற்றுக்கிழமை காலை வீரவாழியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் 108 பால் காவடியுடன், கைலாசநாதர் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர் . பின்னர், அங்குள்ள சிவசண்முக முருகனுக்கு பால் 
அபிஷேகம், ஆராதனை செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.      திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகமும், செவ்வாய்க்கிழமை இடும்பன் பூஜையும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.