திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீரட்டானேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா

திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:10 am

DIN

திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, இந்தக் கோயிலில் வஸந்த உற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. 
விழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவர்ண பூஜை, மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 
மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அர்ச்சனை, தீபாராதனை செய்யப்பட்டு, சோமாஸ்கந்தர் வஸந்த மண்டபத்துக்கு எழுந்தருளி, சோடசோபஸார தீபாராதனை நடைபெற்றது.  தொடர்ந்து, வஸந்த மண்டபத்தில் நாகஸ்வரம்-தவில் மங்கல வாத்தியம், வேத மந்திரங்கள், சிவபுராணம்-தேவாரம், சின்ன மேளம், சங்கவாத்தியம் என முறையே 5 பிரதட்சணங்கள் முழங்கப்பட்டது. 
பின்னர், சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  தொடர்ந்து, ஆலய வளாகத்தில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.  ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் கோயில் குருக்கள் செய்திருந்தனர்.
ஞானானந்த தபோவனத்தில்...: திருக்கோவிலூர் அருகே ஞானானந்த தபோவனத்தில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அதிகாலை 5 மணிக்கு அதிஷ்டானத்தில் மகன்யாச ஏகாதச ருத்ரஜபம், மூர்த்திகள் அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், பாதபூஜை, காலை 8 மணிக்கு அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
 மாலை 5 மணிக்கு மணி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, அதிஷ்டான பூஜைகள் நடைபெற்றது.   விழாவுக்கான ஏற்பாடுகளை தபோவனம் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.