கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரோட்டத்தை தரிசித்தனர்.
கள்ளக்குறிச்சி ஸ்ரீபூமி நீளா புண்டரீகவல்லி ஸமேத ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவம் கடந்த 20 ஆம் தேதி காலை துவங்கியது. தினமும் காலையில் பள்ளக்கில் திருவீதி உலா நடைபெற்றது. இரவில் சுவாமி ஹம்ஸ வாகனம், ஸிம்ஹ வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம் பரமபதநாதச் சேவை, கருடசேவை, திருப்பல்லக்கு, யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா மூலம் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்குமேல் மேஷ லக்னத்தில் திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது. 9 மணிக்கு மேல் மந்தைவெளித் திடலை விட்டு கிளம்பியது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி சாலை, சேலம்-சென்னை நெடுஞ்சாலை, கவரைத்தெரு வழியாக, மந்தைவெளித் திடலை மதியம் வந்தடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...