புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிறுவந்தாட்டில் கண்காணிப்புக் கேமராக்கள்

விழுப்புரம் அருகேயுள்ள சிறுவந்தாட்டில் குற்றச் சம்பங்களைத் தடுக்க பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் ஞாயிற்றுக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:57 am IST

விழுப்புரம் அருகேயுள்ள சிறுவந்தாட்டில் குற்றச் சம்பங்களைத் தடுக்க பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் ஞாயிற்றுக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகேயுள்ள சிறுவந்தாடு கிராமத்தில் ஏராளமான பட்டுத் துணிக் கடைகள் உள்ளன. 
இங்கு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பட்டுத் துணி வாங்க பொதுமக்கள் வந்து செல்வர். விழாக்கள், திருவிழா காலங்களில் பல லட்ச ரூபாய் வியாபாரம் நடைபெறும்.  இந்த நிலையில், கார், இரு சக்கர வாகனங்களின் வந்து செல்வோரிடம் பணம், நகை அவ்வப்போது திருடுபோவதும், குற்றச் சம்பவங்களும் நிகழ்ந்து வந்தன. இதைத் தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அப்பகுதி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்று, வியாபாரிகள் சிறுவந்தாட்டில் முக்கிய இடங்களில் ரூ.2 லட்சம் செலவில், 11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.   இந்தக் கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்.பி.  ஜெயக்குமார் கலந்துகொண்டு கேமராக்களின் இயக்கத்தை தொடக்கி வைத்துப் பேசினார்.
    நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சங்கர், பயிற்சி டி.எஸ்.பி. வினோதினி, வளவனூர் காவல் ஆய்வாளர் லட்சுமி, உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், பலராமன், அப்பகுதி வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.