டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வுப் பேரணி

பள்ளி மாணவிகள் பங்கேற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வுப் பேரணி கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:16 am

DIN

பள்ளி மாணவிகள் பங்கேற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வுப் பேரணி கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது. 
கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், பெண் குழந்தைகளை பாதுகாப்பது, குழந்தைத் திருமணத்தை தடுப்பது குறித்து நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். 
ஊர்நல அலுவலர் புவனேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியர் ம.மார்கிரேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமை ஆசிரியை அ.கற்பகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி டிஎஸ்பி வி.கோமதி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். 
பேரணியில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பெண் குழந்தைகளை பாதுகாப்பது, குழந்தைத் திருமணத்தை தடுப்பது குறித்தும், குழந்தை வருமானம் வீட்டிற்கும் நாட்டிற்கும் அவமானம் என்பது குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
 ஆசிரியை ஆ.சத்தியபிரியா, ஜெயந்தி, உடல்கல்வி ஆசிரியர் இ.சந்தீஷ் உள்ளிட்ட ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பின்னர் பள்ளியை வந்தடைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.