சங்கராபுரத்தில் சங்கைத் தமிழ்ச் சங்கம் சார்பில், 34-ஆவது இலக்கியம் சார்ந்த சமூகச் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஓவியர் மு.கலைச்செழியன் தலைமை வகித்தார். வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், தலைமை ஆசிரியர் ச.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் ச.சாதிக்பாட்ஷா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், கடையேழு வள்ளல்களில் மலையமான் திருமுடிக்காரி என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் ஆ.இலட்சுமிபதி, மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் என்ற தலைப்பில் புலவர் பெ.சயராமன், காமராஜரின் ஆட்சி நிர்வாகம் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.அறிவழகன், குறளும் - நாடும் என்ற தலைப்பில் தமிழ்வழிக் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அ.சி.சின்னப்பதமிழர், பனகல் அரசர் என்ற தலைப்பில் முனைவர் தே.சாந்தகுமார் ஆகியோர் பேசினர்.
கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.வ.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத் தலைவர் ம.சுப்பராயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திராவிடர் கழக நிர்வாகி பெரியார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







