வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

127 மையங்களில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை 39,870 பேர் எழுதுகின்றனர்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. 127 மையங்களில் 39 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:06 am

தினமணி

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. 127 மையங்களில் 39 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி ஏப்.16 வரை நடைபெற உள்ளது. இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 284 மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 39,870 மாணவ, மாணவிகள் 127 மையங்களில் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக, விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் 5,681 மாணவர்களும், 6,387 மாணவிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களில் 7,233 மாணவர்களும், 7,740 மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 6,662 மாணவர்களும், 6,197 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
 பிளஸ் 2 தனித்தேர்வுகள் 4 தேர்வு மையங்களில், 1,987 பேரும், பிளஸ் 1 தனித்தேர்வர்கள் 3 மையத்தில் 28 பேரும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுப்பணிக்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்பட 3ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.
 வருவாய்த் துறை அதிகாரிகள், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் தனித்தனி பறக்கும் படைகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
 தேர்வின்போது, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதாக மாணவர்கள் பிடிபட்டால், இரு பருவங்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்வுப் பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமையிலான கல்வித் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.