வளவனூர் அருகே மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகேயுள்ள ஏ.கே.குச்சிப்பாளையம் பகுதியில் லாரியில் மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு சென்றனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி சோதனையிட முற்பட்டனர். இதற்கு லாரி ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கொலை மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்ததில், அவர்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த முத்துக்குமார்(36), மதுரை மேலூரைச் சேர்ந்த முத்துசாமி(50) என்பதும், மணலை திருடி கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமார், முத்துசாமி ஆகிய இருவரையும் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

அர.செட்டிப்பட்டி ஸ்ரீ ஐயனராப்பன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

