நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 9:53 am IST

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள் 28 பேரை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதன்படி, விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக காவல் ஆய்வாளர் ரேவதி, கடலூர் மாவட்டம், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் கல்பனா, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, விருத்தாசலம் காவல் நிலையத்துக்கும், கடலூர் மாவட்டம், வடலூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இரு மாவட்டங்களிலும் மொத்தம் 28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.