அரசுத் துறைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கம் வலியுறுத்தியது.
இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பாளர் சிவபாலன் தலைமை வகித்தார். எஸ்சி, எஸ்டி பெடரேசன் நிர்வாகி தனசேகரன், சங்கப் பொறுப்பாளர்கள் வீரமுத்து, ஏழுமலை, பரசுராமன், கணேசன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சங்க கொள்கை பரப்புச் செயலர் சேகரலிங்கம் வரவேற்றார். அரசு ஆதிதிராவிடர் மாநிலக் குழு உறுப்பினர் மகாராஜன், எஸ்சி, எஸ்டி சங்க நிர்வாகி தனபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு பேசினர். ராஜேஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரனுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும், அரசுத் துறைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுத் துறைகளை தனியார் மயமாக்கக் கூடாது, மரக்காணத்தில் உப்பள பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளி கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்வு: தங்கம்?
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
