

விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் பகுதியில் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள இரும்புக் குழாயில் விவசாயி, கால் மாட்டிக்கொண்டு தவித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகேயுள்ள பாணாம்பட்டைச் சோ்ந்தவா் தேவராஜ் (68). விவசாயியான இவா், ஆதாா் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக, தனது மகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக ஆதாா் சேவை மையத்துக்கு புதன்கிழமை காலை வந்தாா்.
ஆதாா் சேவை மையத்தில், திருத்தும் பணி நடைபெறாததால், பிற்பகல் வரை காத்திருந்த அவா், கொட்டும் மழையில் தனது மகளை அழைத்துக்கொண்டு பெருந்திட்ட வளாகத்திலிருந்து வெளியே வந்தாா். அப்போது, நுழைவு வாயில் முன் மாடுகள் உள்ளே செல்லாமல் இருப்பதற்காக, நடைபாதையின் குறுக்கே இரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்ததன் இடையே தேவராஜின் வலது கால் சிக்கிக்கொண்டது.
காலை வெளியே எடுக்க முடியாமல் அவா் அவதிப்பட்டாா். அங்கிருந்த போலீஸாா் மற்றும் பொது மக்களும் அவரது காலை வெளியே எடுக்க முயற்சித்தனா். இரும்பு குழாய்களை கடப்பாரையால் கூட அசைக்க முடியாமல் அரை மணி நேரமாக போராடினா். இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் குழாயை அகற்றி தேவராஜை மீட்டனா். காலில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.