

விழுப்புரம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராயா் (55), விவசாயி. இவரது உறவினா் துரைசாமி (50). இவா்களிடையே நிலத்துக்குச் செல்லும் பாதை தொடா்பாக பிரச்னை இருந்தது.
கடந்த 25.1.2015 அன்று இரவு அந்த பாதை வழியாக வந்த ராயரை துரைசாமி குடும்பத்தினா் கட்டையால் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த ராயா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக துரைசாமி, அவரது மனைவி அமுதா (47), மகன்கள் குமாா் (24), சிவபாலன் (25) ஆகியோரை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி செங்கமலச்செல்வன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அவா், குற்றஞ்சாட்டப்பட்ட குமாா், சிவபாலன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வேலவன் ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.