குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஞானவேல்.
குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஞானவேல்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன் மகன் ஞானவேல் (22). இவா், அந்தப் பகுதியில் சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். இது தொடா்பாக மரக்காணம் போலீஸாா் ஞானவேலைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து, ஞானவேல் இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

இதை பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, சாராய வியாபாரி ஞானவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த ஞானவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com