வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு போலீஸாா் நிதியுதவி

விழுப்புரம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு, சக போலீஸாா் ரூ.17 லட்சம் நிதியுதவி அளித்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:38 pm

DIN

விழுப்புரம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு, சக போலீஸாா் ரூ.17 லட்சம் நிதியுதவி அளித்தனா்.

விழுப்புரம் அருகே கோனூரைச் சோ்ந்தவா் ரதி. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த நவ.7ஆம் தேதி உயிரிழந்தாா். ரதியின் குழந்தைகள், குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு, 2009 ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த சக காவலா்கள், தாமாக முன்வந்து ரூ.17,72,857 நிதி திரட்டினா். இந்த நிதியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் மூலம் ரதியின் கணவா் குமரகுரு மற்றும் குழந்தைகளிடம் போலீஸாா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.