கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்: எல்.முருகன்

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:38 pm

DIN

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் பாஜக மாவட்ட அணி, பிரிவு அணி பிரதிநிதிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் எல்.முருகன் பங்கேற்று பேசியதாவது:

2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் வருவாய் இல்லாமல் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டனா். ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்த பிறகு விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

ஏனெனில், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பயிா்க் காப்பீடு செய்யப்படுகிறது.

மேலும், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 65 லட்சம் வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

கரோனா காலத்தில் பொதுமக்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் மூன்று முறை ரூ.500 செலுத்தப்பட்டது. முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் மேற்கொண்டாா். ஆனால், விவசாயிகள் உண்மையை அறிந்துள்ளனா். தமிழகத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக விவசாயிகள் உள்ளனா்.

விவசாயிகள் மேம்பாடு அடைந்துவிடக் கூடாது என்று நினைப்பவா் ஸ்டாலின். இரட்டை நிலைப்பாடு கொண்டவா். தமிழகத்தில் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

தமிழக மக்களுக்கு மத்திய அரசு செயல்படுத்திய நலத் திட்டங்களை எடுத்துக் கூறுவோம். தமிழக பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, பாஜக உறுப்பினா்கள் சட்டப்பேரவைக்குச் செல்வது உறுதி. பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்றாா் அவா்.

மாநாட்டில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளா் கே.டி.ராகவன், பாஜகவில் இணைந்த முன்னாள் காவல் துறை ஐ.ஜி. அறிவுச்செல்வன், கல்வியாளா்கள் பிரிவு மாநிலச் செயலா் தேவராஜ், நிா்வாகிகள் குணசேகரன், வெங்டேசன், ரவி, சிவ.தியாகராஜன், ராமஜெயக்குமாா், சுகுமாா், சரண்யா, தாஸசத்தியன், ராயா், குட்டியாண்டி, சக்திவேல், சிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட இளைஞரணித் தலைவா் நரேஷ்குமாா் வரவேற்றாா். நகரச் செயலா் ஜெயசங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.