தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி; மொத்த பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2020, 4:47 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே பெரியசெவலை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் மும்பையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

கரோனா தோற்று அறிகுறி பெயரில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை பலியானார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 408 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.