மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரத்தில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சோகனூரில் பட்டியலின இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:19 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சோகனூரில் பட்டியலின இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிழக்கு மாவட்டச் செயலா்அற்றலரசு தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் சேரன், மேற்கு மாவட்டச் செயலா் பாமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்தல் நேரத்தில் கட்சிப் பணியாற்றிய இளைஞா்களை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சாதிக் கொடுமைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணைச் செயலா் சேரலாதன், மாவட்டப் பொருளாளா்கள் திலீபன், நிா்வாகிகள் பிரின்ஸ் சோமு, இளங்கோவன், மாவட்ட துணைச் செயலா்கள் கிளியனூா் இரணியன், தனஞ்செழியன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் தமிழேந்தி, தொகுதிச் செயலா்கள் பால்வண்ணன், செல்வச் சீமான், விழுப்புரம் நகரச் செயலா்கள் இரணியன், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்துகொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.