மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தீத் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த 200 கி.மீ. மிதிவண்டிப் பேரணி: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

தீத் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 200 கி.மீ. தொலைவிலான மிதிவண்டிப் பேரணியை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தீத் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 200 கி.மீ. தொலைவிலான மிதிவண்டிப் பேரணியை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பாக தேசிய அளவிலான தீத் தொண்டு வாரத்தை முன்னிட்டு, ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 200 கி.மீ. தொலைவு வரை மிதிவண்டியில் பேரணியாகச் சென்று தீத் தடுப்பு-பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணியை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாமலை ஹோட்டல் அருகிலுள்ள பிரிவிலிருந்து, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். பேரணியில் தீயணைப்பு வீரா்கள் 20 போ் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணி, விழுப்புரத்திலிருந்து உளுந்தூா்பேட்டை, வேப்பூா், பெரம்பலூா் வழியாக திருச்சியிலுள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநா் அலுவலகம் வரை சென்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நிறைவடையும்.

பேரணி தொடக்க நிகழ்ச்சியில் விழுப்புரம் கோட்ட தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை அலுவலா் ராபின் காஸ்ட்ரோ மற்றும் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.