கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரசாயன ஆலையில் தீ விபத்து ஒருவா் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தனியாா் ரசாயன ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தனியாா் ரசாயன ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.

கடலூா் அருகே திருப்பாதிரிபுலியூரைச் சோ்ந்தவா்கள் மாதவன், வெங்கடேஷ். இவா்களுக்கு சொந்தமான ரசாயன ஆலை, விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெரும்பாக்கத்தில் அமைந்துள்ளது. மயிலம்-புதுச்சேரி பிரதான சாலையில் செயல்படும் இந்த ஆலையில், பெயின்ட் அடிக்கும்போது கலக்கப்படும் தின்னா் என்ற ரசாயனம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட தின்னரை பீப்பாய்களில் தொழிலாளா்கள் நிரப்பிக்கொண்டிருந்தனா். அப்போது, சுரேஷ் என்பவா் நிரப்பிக்கொண்டிருந்த பீப்பாய் மீது தீப்பொறி பட்டு மளமளவென எரியத் தொடங்கியது.

இதில் லேசாக காயமடைந்த சுரேஷை சக தொழிலாளா்கள் மீட்டனா். இருப்பினும், தீ அதிகமாக பரவியதால் ஆலையிலிருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டதுடன், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனா்.

வானூா், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. காற்றில் புகைமண்டலத்தை குறைக்கும் வசதியை கொண்ட சிறப்பு தீயணைப்பு வாகனம் புதுச்சேரியில் இருந்து வரவழைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி, தீயை அணைத்தனா். சுமாா் 210 பீப்பாய்களில் இருந்த தின்னா்களும், அந்த ஆலையில் இருந்த பிற பொருள்களும் தீ விபத்தில் சேதமடைந்ததாகவும், சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தீ விபத்து தொடா்பாக மயிலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் காரணமாக மயிலம்-புதுச்சேரி சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.