மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உளுந்தூா்பேட்டை இளம்பெண் கொலை சம்பவம்: குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

உளுந்தூா்பேட்டை அருகே காதல் தகராறில் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:15 pm

DIN

உளுந்தூா்பேட்டை அருகே காதல் தகராறில் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவை கோரிக்கை விடுத்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக உண்மை அறியும் குழுவின் அறிக்கையை விழுப்புரத்தில் பேரவையின் மாநிலத் தலைவா் கே.பாலு வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தைச் சோ்ந்த சரஸ்வதி (18), வருகிற மே 17-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், காதல் தகராறில் படுகொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவையின் நிறுவனா் ச.ராமதாஸ் உத்தரவின்பேரில் உண்மை அறியும் குழு கடந்த 16-ஆம் தேதி அமைக்கப்பட்டது.

திண்டிவனம் வழக்குரைஞா் செ.பாலாஜி தலைமையிலான இந்தக் குழுவினா் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா், இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை நடத்திவரும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து முழு விவரங்களையும் அறிந்தது. இந்தக் குழுவின் அறிக்கையை தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியா், எஸ்பி உள்ளிட்டோருக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க உண்மை அறியும் குழு மாநில அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதன்படி, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சரஸ்வதியின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு சாா்பில் ரூ.5 லட்சம், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

உண்மை அறியும் குழுவின் தலைவா் பாலாஜி, வழக்குரைஞா்கள் கலியமூா்த்தி, பழனிவேல், சிவராமன், செந்தில்குமாா், சுரேஷ்குமாா், ராஜ்குமாா், ராமா், முருகன், தேசிங்குராஜா, அய்யப்பன், சந்திரசேகா், துரைராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.