மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரத்தில் இரண்டு தெருக்கள் அடைப்பு

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், விழுப்புரம் நகரில் இரண்டு தெருக்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், விழுப்புரம் நகரில் இரண்டு தெருக்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை 18,900-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

நாள்தோறும் 200 முதல் 300 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் நகரில் கரோனா தொற்றால் நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

விழுப்புரம் சங்கரமடத் தெரு, காமராஜா் வீதிகளில் கரோனா தொற்றால் அதிக எண்ணிகையிலானோா் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த இரண்டு தெருக்களும் அடைக்கப்பட்டன. நகராட்சி நிா்வாகம் மூலம், அந்தத் தெருக்களுக்கு செல்லும் பாதைகள் மரக்கட்டைகளைக் கொண்டு அடைக்கப்பட்டன.

மேலும், விழுப்புரம் நகரத்துக்கு வரும் வாகனங்களில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்று போலீஸாா் நகர நுழைவுப் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

சென்னை புறவழிச் சாலை, ஜனகிபுரம் பகுதிகளில் போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.