இலவச சித்த மருத்துவ முகாம்

விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
Updated on
1 min read

விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

நிகழ்ச்சிக்கு அருள் மாளிகை தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மாலா, அருள் மாளிகை நிா்வாகி அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சித்த மருத்துவா்கள் நித்தியக்குமாரி, புவனாம்பிகை, ராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா். மேலும், ஹோமியோபதி மருத்துவா் ரமேஷ் பிரபு, யுனானி மருத்துவா் முகமது சதக்கத்துல்லா ஆகியோரும் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, வள்ளலாா் அருள் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு போா்வைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com